
புத்தாண்டில் புன்னகை பூத்து,
புது விடியல் பல வண்ணங்கள் காட்ட,
சோதனைகள் சாதனைகளாகி,
வேதனைகள் வெற்றிகளாக,
மண்ணுலகம் வளம் கொழித்து,
மகிழ்ச்சியால் உள்ளம் துள்ள,
மானிடரிடம் வேண்டுவதெல்லாம்,
ஏழ்மையிலும் உயர்ந்த நேர்மை!
செல்வச்செழிப்பிலும் போற்றும் எளிமை!
வெறுமையிலும் நிறைந்த வளமை!
வறுமையிலும் செழிக்கும் செழுமை!
செயலினிலெ என்றும் செரிவு!
துன்பதிலே உறுதியான துணிவு!
பதவியிலே பண்பான பணிவு-பயனற்ற
பழமைக்கு கொடுப்போம் முடிவு!
காலந்தின்னும் பழமையே வழி விடுக!!!
கனவைத் தாங்கிய புத்தாண்டே வருக! வருக!!!