நீ உன்னை நம்பு
இடியே விழுந்தாலும்
மன உரத்தினை நம்பு !!!
காலைச் சூரியன் கரைந்துவிடாது
மாலைச் சந்திரன் சரிந்துவிடாது
சுற்றும் உலகம் தொலைந்துவிடாது
சுற்றும் உலகம் தொலைந்துவிடாது
புதையல் நீ தேடு!!!
கடலலை என்றும் ஓய்வறியாது
வீசும் காற்றும் நின்றுவிடாது
எரிமலை அடங்கி தூங்கிவிடாது
வெடித்து முன்னேறு !!!
காலம் இது காலம்
உன் திறமையை காட்ட
பின்வருமே ஒரு கூட்டம்
நீ வழிகாட்ட !!!
வேட்டை நாய்கள் பதுங்கிவிடாது
விதிகள் உன்னை அடக்கிவிடாது
புது விதிகள் நீ கூறு !!!
சீறும் பாம்பு பயமறியாது
சரித்திரம் உன்னை மறந்துவிடாது
நீ ஒரு வரலாறு !!!

2 comments:
Nice one anna....
Very inspiring Shakhty.. Way to go :) :) :)
Post a Comment