Thursday, July 4, 2013

நாம் விழித்திட இதுவே நேரம் ஐயா !!!

ஒரு வல்லரசான
இந்தியா காண
ஆவலாய் காத்திருந்தேன்!
எந்தன் நாட்டுப் பட்டுக்கொடி
பாரில் உயர்ந்திட
கனவுகள் கண்டிருந்தேன்!
நான் பேதையன்றோ -  அட
பித்தனன்றோ -நான்
கண்ட கனவினில் நியாயமுண்டோ !!!

என்ன வளமில்லை
எந்தன் திருநாட்டில்
என்றே நானிருந்தேன் - அட
உள்ள வளமெல்லாம்
கொள்ளையடிக்கவே
இன்றே  நானுணர்ந்தேன் !!!

நான் சொல்வதெல்லாம்
அட உண்மையையா  - நம்
அரசாங்கம் ஒரு பொம்மையையா
காலம் இன்னும் உள்ளதையா - நாம்
விழித்திட இதுவே நேரம் ஐயா !!!