Friday, June 4, 2010

பெண்ணென பிறந்ததென்ன!



பொன்னிருக்க மணியிருக்க,
ஆழ்கடல் முத்திருக்க;
பூவிருக்க நிலவிருக்க,
ஓயாத அலையிருக்க;
பெண்ணென பிறந்ததென்ன!
ஆழ்மனம் கொண்ட மர்மமென்ன!

கள்ளிப்பால் நெல்மணி என,
காலன்தான் உருமாறிவர;
காலனுக்கு காலனாகி,
கரிகாலன் வாழ்ந்த மண்ணில்
வாழ்க்கை கணக்கை தொடங்கியதென்ன!
வாயைக்கொண்டு பிழைத்ததென்ன!

வாழைத்தண்டு கால்கள் ஆட,
மழலை மொழி பாட்டுப்பாட,
குறுகிய காலமென்ன!
குத்தகைக்கு எடுத்ததென்ன!

கட்டுபாடுகள் திடமாக,
கல்வி கற்க போராட,
கடுகுக்குள் காரமாக,
விதைக்குள் மரமாக,
பூத்த பருவமென்ன!
பெண்மையை உணர்ந்ததென்ன!

மாற்றி நடும் நாற்றாக;
பெரியோர் சொன்ன கூற்றாக;
புதியவனை மனந்ததென்ன!
புது வாழ்க்கை கண்டதென்ன!

புது சொந்தம் புது வசந்தம்;
நன்கு துடைக்கும் புது துடைப்பம்;
புகுந்தவீட்டு சொந்தமென்ன!
அரவணைக்கும் பாங்கென்ன!

வாழையடி வாழையென,
குடும்பம்தான் தழைத்தோங்க;
குழந்தைச் செல்வம் கொண்டதென்ன!
பிறவிப் பயன் அடைந்ததென்ன!

கொள்ளுப்பேரன் பேத்தியென,
சொந்தங்கள் நீண்டதென்ன!
கொள்ளுப்பாட்டி ஆனபோதும்
குழந்தை மனம் கொண்டதென்ன!

உலக அதிசயங்கள் ஏழுதானே-அதில்
எட்டாவதும் நீதானே!
உயிரற்ற அதிசயங்களில்,
உயிருள்ள அதிசயமாய்
பூவுலகில் பிறப்பதென்ன!-மனித
பிறவியை இயக்குவதென்ன!

2 comments:

Naga said...

Ts beautifull sakthi:) i feel gr8 to read t, as a gal:) thanks 4 writting dis..

Unknown said...

vazhthukall.. sakthi kul ipdi oru sakthi a ena viyandadena.... thodarndhu ezhudhuvardharku en manamarndha prarthanaikal.. tamizh sezhyithu vazhga.... natpudan thamarai