
காலை கதிரவன்
கைகளை நீட்ட !
கீழ்த்திசை மெருகேறி
பொன்னென மின்ன !
பொட்டல் காட்டில்
எழுகிற சத்தம்
மிச்சத் துயிலை
தூர விரட்ட!
பச்சைப் பசேலென
புல்லின் பசுமையும்!
புல்நுனி தாங்கிய
பனித்துளி போர்வையும்!
காக்கை குயில் என
பறவைகள் கூட்டம்!
ஓயாது ஒலித்திடும்
மெட்டற்ற பாட்டும்!
மொட்டு வெடிக்கும்
சின்னப் பூவும்-அதை
வட்டமடிக்கும்
சிறு கருவண்டும் !
வீசும் காற்றின்
வீரியம் குறைக்கும் !
நெட்டென வளர்ந்த
மரங்கள் கூட்டம் !
காற்றில் அசையும்
கிளையும் இலையும்!
எழு என அழைக்கும்
சங்கேத மொழியும்!
அவசர வாழ்வில்
அவசிய தருணம்
சுத்தக் காற்றை
சுவாசிக்கும் நிமிடம் !
நித்தம் நித்தம்
வரலாறு படைக்க
சோதனை எல்லாம்
சாதனை ஆக
புத்தம் புதிய
விடியல் வரட்டும்
ஓயாத அலையென
ஊக்கம் இருக்கட்டும்!
No comments:
Post a Comment