Wednesday, June 9, 2010

கனவுக்கு இல்லை வேலி!!!






இரவென்றால் ஒரு விடியலுண்டு-அந்த
விடியலை நோக்கி நடைபோடு;
விட்டில் பூச்சியைப் போலன்றி -வாழ்வில்
சாதனை படைக்க முழக்கமிடு;
கார்முகில் உந்தன் பக்கம் வரும் -நீ
ஆணையிட்டால் அது மழை கொட்டும்;
எல்லாம் இன்று கனவுகளே!-நாளை
நிஜமாகும் உன் புத்தியிலே!

கணக்காய் இருந்தால் மானிடனே-என்றும்
பிணக்கே வராது வாழ்வினிலே;
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு-இந்த
மூன்றையும் என்றும் அசைபோடு;
உழைப்பு உழைப்பு என்று மட்டும் -நீ
உழைத்திடுவாயே வாழும் மட்டும்;
உலகம் உன்னைப் புகழுமட்டும்-உன்
ஆன்மா உலகைச் சுற்றி வரும்!

இமயம் என்பது சிறியதுதான் -அது
தூசு என்றல் ரொம்ப சிறியதுதான்;
இமயம் போல் வரும் துன்பங்களே -அதை
கரைத்திடுவாய் உன் முயற்சியிலே;
சாதனை படைக்க வரம்பில்லை -அந்த
விண்ணும் நமது எல்லையில்லை;
கடலுக்கும் உண்டு முடிவுகளே! -நம்
கனவுக்கு இல்லை வேலிகளே!



2 comments:

Naga said...

highly inspiring:)

Priya Ethirajan said...

pakka pakka......