உன்னோடு பழகிய நாட்கள்
எந்நாளும் மறவேன் கண்மணியே!!
உன் விழிகள் சொன்ன கவிதைகள் - அதில்
புதைந்த ஆயிரம் கற்பனைகள்
உன் மழலைப் பேச்சின் இனிமைகள் - அதன்
வார்தையில் தெரித்த தத்துவங்கள்
உன் கைகள் காட்டிய அதிசயங்கள் - காற்றில்
விரல்கள் தீட்டிய ஓவியங்கள்
உன் கொலுசு பாடிய பாட்டுக்கள் - அதற்கு
கால்கள் ஆடிய நாட்டியங்கள்
ஆதலால்,
பசுமை நிறைந்த உன் நினைவுகளை
எந்நாளும் மறவேன் கண்மணியே!!!!
