
நெஞ்சிலே இனிப்பதென்ன மங்கை இளமயிலே!
நினைவுகளோ கனவுகளோ மங்கை இளமயிலே!
கண்டவுடன் காதல் கொண்டேன் மங்கை இளமயிலே!
பார்வைக்காக ஏங்கி நின்றேன் மங்கை இளமயிலே!
மந்திரமோ தந்திரமோ மங்கை இளமயிலே!
காந்தமாக என்னை ஈர்த்தாய் மங்கை இளமயிலே!
மன்னாதி மன்னனுக்கு மங்கை இளமயிலே!
மாசற்ற பெண்ணா நீயும் மங்கை இளமயிலே!
கள்வர்கள் நிறைய உண்டு மங்கை இளமயிலே-உன்
அங்கமெல்லாம் புதயலடி மங்கை இளமயிலே!
அழகெல்லாம் கூடுதடி மங்கை இளமயிலே!
பெண்மை உந்தன் நாணத்தாலே மங்கை இளமயிலே!
அலை கூந்தல் ஏன் வளர்த்தாய் மங்கை இளமயிலே!
காளையரை அடிப்பதற்கோ மங்கை இளமயிலே!
வில்லான கண்களவும் மங்கை இளமயிலே!
காதல் அன்பை எய்வதற்கோ மங்கை இளமயிலே!
காதினிலே காதணிகள் மங்கை இளமயிலே!
காற்றில் ஆடும் கொடிகள்தானோ மங்கை இளமயிலே!
கன்னங்கள் ஒவ்வொன்றும் மங்கை இளமயிலே!
அமுது வழியும் கிண்ணங்களோ மங்கை இளமயிலே!
பச்சரிசிப் பற்களடி மங்கை இளமயிலே!
வாயிலுள்ள முத்துக்களோ மங்கை இளமயிலே!
தாம்பூலம் ஏதுமின்றி மங்கை இளமயிலே!
சிவந்த நாக்கு அதிசயமோ மங்கை இளமயிலே!
முல்லைக்குத் தேர் கொடுத்தான் மங்கை இளமயிலே!
பாரி அன்று கொடையாக மங்கை இளமயிலே!
கொடியாடும் இடையழகே மங்கை இளமயிலே!
கொடையாக உன்னைத் தருவாய் மங்கை இளமயிலே!
அன்னம் போல் நடை நடந்து மங்கை இளமயிலே!
இதயத்தில் ஏறிவிட்டாய் மங்கை இளமயிலே!
உனக்காக ஏங்கும் என்னை மங்கை இளமயிலே!
நெஞ்சணையில் உறங்க வைப்பாய்மங்கை இளமயிலே!
கண்ணடி கூடாதென்பர் மங்கை இளமயிலே!
உன் கண்ணடியில் வீழ்ந்துவிட்டேன் மங்கை இளமயிலே!
நோய் என்னை அழிக்கும் முன்பு மங்கை இளமயிலே!
காதல் மருந்து தருவாய் நீயும் மங்கை இளமயிலே!