
மண்ணில் ஒரு விதை
நெஞ்சில் உன் முகமே கவிதை;
உன்னோடு நான்- உன்
உணர்வோடு நான்;
கடலாக உன்னில்-என்றும்
அலையாக நான்;
காற்றாக நீ - உன்
மூச்சாக நான்;
உணர்வெல்லாம் நீ-வெறும்
உடல் மட்டும் நான்;
தாயாக நீ -உன்
சேயாக நான்;
சாயாமலே என்றும்- உன்
நினைவிலே நான்.
No comments:
Post a Comment