Thursday, September 2, 2010

மனம் வாடுதே; மதி மயங்குதே;



விழி மூடினேன் உறங்க எண்ணி;
இமை மறுத்ததே தூக்கம் தள்ளி;
நடுக்காட்டிலே துணைகள் இன்றி;
தனிமனிதனாய் வழிகள் தேடி;
புது விடியலை எனக்குள் காண
மனம் வாடுதே; மதி மயங்குதே;

முத்தென நீர்த்துளி வழிய,
சட்டென துக்கம் நிறைக்க,
கண்ணீர் குளத்தில் மிதக்கும்
எண்ணப் படகில் மூழ்கி,
முத்தெடுக்க துடிக்கிறேன்;
இளைய ரத்தம் எனது ரத்தம்,
இடி முழக்கம் எனது சத்தம் என,
என்னை நானே தேற்றுகிறேன்;