
வெள்ளச் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும் டும்
நீள வானம் சுருங்கிப் போச்சு டும் டும் டும் டும்
வீசும் காற்று கையில்லாச்சு டும் டும் டும் டும்
சுற்றும் பூமி நின்னுபோச்சு டும் டும் டும் டும்
கடலின் ஆழம் தூர்ந்து போச்சு டும் டும் டும் டும்
குட்டையென கடலும் ஆச்சு டும் டும் டும் டும்
கோள்களெல்லாம் வீடுகளாச்சு டும் டும் டும் டும்
அண்டமெல்லாம் கடைகளாச்சு டும் டும் டும் டும்
மேகமெல்லாம் ஆவியாச்சு டும் டும் டும் டும்
ஓவியமும் உயிராச்சு டும் டும் டும் டும்
பச்சைப் புடலை பம்பாச்சு டும் டும் டும் டும்
பாம்பு கூட நடக்கலாச்சு டும் டும் டும் டும்
பதரெல்லாம் உணவாச்சு டும் டும் டும் டும்
உணவெல்லாம் விஷமாச்சு டும் டும் டும் டும்
கருப்பு காக்கா குயிலாச்சு டும் டும் டும் டும்
கரும்புச் சுவை கசக்கலாச்சு டும் டும் டும் டும்
ஏழைகளின் வறுமை போச்சு டும் டும் டும் டும்
எல்லாமே என் கனவிலாச்சு டும் டும் டும் டும்
No comments:
Post a Comment