Wednesday, June 2, 2010

டும் டும் டும் டும்



வெள்ளச் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும் டும்

நீள வானம் சுருங்கிப் போச்சு டும் டும் டும் டும்

வீசும் காற்று கையில்லாச்சு டும் டும் டும் டும்

சுற்றும் பூமி நின்னுபோச்சு டும் டும் டும் டும்

கடலின் ஆழம் தூர்ந்து போச்சு டும் டும் டும் டும்

குட்டையென கடலும் ஆச்சு டும் டும் டும் டும்

கோள்களெல்லாம் வீடுகளாச்சு டும் டும் டும் டும்

அண்டமெல்லாம் கடைகளாச்சு டும் டும் டும் டும்

மேகமெல்லாம் ஆவியாச்சு டும் டும் டும் டும்

ஓவியமும் உயிராச்சு டும் டும் டும் டும்

பச்சைப் புடலை பம்பாச்சு டும் டும் டும் டும்

பாம்பு கூட நடக்கலாச்சு டும் டும் டும் டும்

பதரெல்லாம் உணவாச்சு டும் டும் டும் டும்

உணவெல்லாம் விஷமாச்சு டும் டும் டும் டும்

கருப்பு காக்கா குயிலாச்சு டும் டும் டும் டும்

கரும்புச் சுவை கசக்கலாச்சு டும் டும் டும் டும்

ஏழைகளின் வறுமை போச்சு டும் டும் டும் டும்

எல்லாமே என் கனவிலாச்சு டும் டும் டும் டும்


No comments: